Monday 12 March 2018

மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுடன் ஆதார் இணைப்பு எப்படி மேற்கொள்வது?

My article on "How to link AADHAAR with Mutual Funds" has been recently published in "Nanayam Vikatan". Click here to read the link directly from vikatan website. The same article is given below.

மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுடன் ஆதார் அட்டையை இணைக்க, மார்ச் 31 கெடு தேதியாக மத்திய அரசு நிர்ணயித்துள்ளது. 


ஒருவர் பல மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களின் பல்வேறு ஃபண்டுகள் முதலீடு செய்திருப்பார்கள். அனைத்து ஃபண்ட்களுடனும் ஆதார் எண்ணை இணைக்க வேண்டியதில்லை.  
மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு முதலீட்டாளர் சார்ந்த சேவையை கேம்ஸ், கார்வி, சுந்தரம் மற்றும் ஃப்ராங்கிளின் டெம்பிள்டன் இந்தியா போன்ற நான்கு நிறுவனங்கள் அளித்து வருகின்றன.

இந்த  நிறுவனங்களில் நமது ஃபண்ட்கள் எந்த நிறுவனத்தால் நிர்வகிக்கப் படுகிறது என்று அறிந்து கொண்டு அந்த நிறுவனங்களில் ஆதார் எண்ணை இணைத்துவிட்டால் அந்த நிறுவனம், நிறுவனத்தில் உள்ள எல்லா திட்டங்களிலும் ஆதார் இணைக்கப்பட்டுவிடும்.

ஒருவர் உங்களது ஏழு மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களின் ஏழு ஃபண்ட்களில் முதலீடு செய்துள்ளார் என வைத்துக் கொள்வோம். ஒரு ஃபண்ட்  கேம்ஸ்-லும், மற்ற ஆறு ஃபண்ட்கள் கார்வியிலும் இருந்தால் கேம்ஸ் மற்றும் கார்வியின் இணைய தளங்களுக்குச் சென்று ஆதார் என்னை இணைத்துவிட்டால்  ஏழு ஃபண்ட்களுடன் ஆதார் எண்  இணைந்து விடும்.

ஆன்லைன் மூலம் இணைக்க இயலாதவர்கள், மேற்கண்ட நிறுவனங்களின் அலுவலகங்கள், முதலீடு செய்திருக்கும் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் கிளை அலுவலகங்கள், மற்றும் மேற்கூறிய சேவை நிறுவனங்களின் அலுவலகங்களுக்கு சென்று ஆதார் கார்ட், பான்கார்ட்  மற்றும் அதன் நகலுடன் சென்று இணைத்துக் கொள்ளலாம்.

ஆதார் எண் இணைக்கப்படவில்லை என்றால் மார்ச் 31ம் தேதிக்கு பிறகு மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுகளில் பரிமாற்றம் செய்ய முடியாத நிலை, அதிலிருந்து பணத்தை எடுக்கவோ முடியாத நிலை உருவாகும். எனவே, சிரமம் பார்க்காலம். இதனை செய்து விடுவது மிக நல்லது.

No comments:

Post a Comment